ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது கோவை விழா..! இது நம்ம ஊர் விழா.. வாங்க கொண்டாடலாம்..!

கோவை: கோவை மாவட்டத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 12ம் ஆண்டு கோவை விழா வரும் ஜனவரி 3ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.


கோவை: கோவை மாவட்டத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 12ம் ஆண்டு கோவை விழாவானது வரும் ஜனவரி 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை விழா கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், 12ம் ஆண்டு விழா ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முன்னோட்டக் கூட்டம் மாநகராட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கப்பற்படையின் கமாண்டிங் அதிகாரி அசோக் ராய் முன்னோட்ட நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். இதனை தொடர்ந்து, கோவை விழாவின் தொடக்கம் முதல் நிறைவடையும் நாள் வரை அன்றாடம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பேசும்போது, இந்த ஆண்டு கோவை விழாவில் நான் முதன் முறையாக கலந்து கொள்ள இருக்கிறேன். நாடே திரும்பிப்பாா்க்கும் விதமாக இந்த விழாவை கோலகலமாக கொண்டாட வேண்டும் என்றார். இந்த முன்னோட்ட நிகழ்ச்சியில், யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் பிரவீன்குமார், கோவை விழாவின் தலைவர் சுப்புராஜ் வெங்கட், துணைத் தலைவர் அபிலாஷா, கோவையை சேர்ந்த தொழில் முனைவோர், விழா நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இந்த ஆண்டு கோவை விழா இசை நிகழ்ச்சிகளுடன் ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 5ம் தேதி மாரத்தான், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜனவரி 10 முதல் 12ம் தேதி வரை கோவையின் முக்கிய உணவகங்கள் ஒரே இடத்தில் உணவு பரிமாறும் உணவுத் திருவிழா கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது.



மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான கலைத் தெரு ஜனவரி 11, 12ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நாள்களில், கலைத்தெரு நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், தொழில்முனைவோருக்கான அடித்தளமாக ’தி பிட்ச்’ என்ற பெயரில் முதலீடுகளை திரட்டும் நிகழ்ச்சி, பழமையான காா், பைக் கண்காட்சிகளும் நடைபெறுகின்றன. இதைத் தவிர பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களின் சார்பில் மாநகரில் ஆங்காங்கே கோவை விழா என்ற அடையாளத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுகின்றன.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...