திருப்பூரில் செய்வினை நீக்கப்படும் என கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட பி.இ பட்டதாரிகள் கைது

திருப்பூர்: திருப்பூர் அருகே செய்வினை நீக்கப்படும் என கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட இரண்டு பி.இ. பட்டதாரி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே செய்வினை நீக்கப்படும் என கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட இரண்டு பி.இ. பட்டதாரி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் கோவில்வழி ஓடியண்ட் பனியன் நிறுவனம் எதிரில் வசித்து வருபவர் மகேஸ்வரன்(35). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், இவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு இரு வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களை ஒரு மதத்தின் (முஸ்லீம்) பெயர், ஆடை அதே போல் அணிந்து, அறிமுகம் செய்து கொண்டு தங்களுக்கு மாந்திரிகம் ஜோதிடம் தெரியும் என கூறியுள்ளனர்.

அப்போது, மகேஸ்வரனிடம் உங்கள் குழந்தைக்கு யாரோ செய்வினை செய்துள்ளனர். அதனை எடுக்க வேண்டும் என்றால் 4500 செலவாகும் எனவும் வழிபாடு மூலம் செய்வினையை நீக்கி விடலாம் என பெயரை மாற்றி, மாற்றி கூறியுள்ளனர். சந்தேகமடைந்த மகேஸ்வரன் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இரு வாலிபர்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தஞ்சை மாவட்டம் கும்பகோணம், நந்திவணம், மருதநல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் பாலாஜி (24) என்பதும், திருவாரூர் தாலுக்கா மருதப் பட்டினம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் மகாபிரபு (23) என தெரியவந்தது.

விசாரணையில் இவர்கள் திருப்பூர், அவினாசி ரோடு, திருமுருகன் பூண்டி பகுதியில் தங்கி, இதுபோன்று பல்வேறு பகுதிக்கு சென்று வீட்டில் உள்ளவர்களிடம் ஜோதிடம் தெரியும், செய்வினை எடுக்கப்படும் என கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலை செய்து வந்துள்ளது தெரியவந்தது.



இதனையடுத்து இருவரையும் ஊரக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் பி.இ. படித்த பட்டதாரி வாலிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...