தெலுங்கானாவை போல பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை - தமிழக அரசுக்கு கௌதமன் கேள்வி

கோவை: தெலுங்கானாவில் கொடுக்கப்பட்டது போன்ற தண்டனையை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தமிழக அரசு கொடுக்க முடியாதா என தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் வ. கௌதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை: தெலுங்கானாவில் கொடுக்கப்பட்டது போன்ற தண்டனையை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தமிழக அரசு கொடுக்க முடியாதா என தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் வ. கௌதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், காட்டுமிராண்டிகளை அழிப்பதில் இதைவிட மோசமான வழிமுறையைப் பின்பற்றுவதில் கூட தமிழ் பேரரசுக்கட்சி துணை நிற்கும். ஆனால் அவசரம் அவசரமாக செய்து முடிக்கும் எதுவும் நீதிக்கும், நேர்மைக்கும் மரியாதை செய்ததாகாது என்றார்.

அதே போல, தெலுங்கானாவில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களோ, வசதி படைத்தவர்களோ அல்ல. ஆனால் அதிகாரத்தில், ஆட்சியில், பண வசதிகள் கொண்ட பிள்ளைகள் அரங்கேற்றிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவ காட்டுமிராண்டிகளுக்கு ஏன் இன்னும் பாதுகாப்பு என்றவர், அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என்று கதறிய 200க்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகளை பாலியல் வன்கொடுமை செய்த ரத்த காட்டேறிகளுக்கு என்ன தண்டனை என கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழக அரசு இவர்களுக்கு தெலுங்கானாவில் நடந்தது போன்ற தண்டனையை கொடுக்க முடியாதா என்றும் யார் தவறு செய்தாலும் உறுதிப்படுத்தும் பட்சத்தில் அவர்களை அழிக்கும் நிலையை அரசு எடுத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் மனித குலமும் ஆதரிக்கும் எனவும் இதற்கு தமிழக அரசு விரைவில் ஒரு பதில் சொல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...