கோவையில் தொடரும் சந்தன மர கடத்தல்; கோவைபுதூரில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே கடந்த சில நாட்களாகவே மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சந்தன மரங்களை வெட்டி கடத்தி வந்த நிலையில், தற்போது கோவைபுதூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் சந்தன மர வேட்டை சம்பவம் நடத்த துவங்கியது பொதுமக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே கடந்த சில நாட்களாகவே மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சந்தன மரங்களை வெட்டி கடத்தி வந்த நிலையில், தற்போது கோவைபுதூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் சந்தன மர வேட்டை சம்பவம் நடத்த துவங்கியது பொதுமக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே சந்தன மரக் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த சந்தன மர கடத்தல்காரர்களை கண்காணிக்க போலீசார் ரோந்து பணிகள் மேற்கொண்டும், கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. காட்டூர் காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, பந்தய சாலை காவல் எல்லை, குனியமுத்தூர் காவல் எல்லை, ஆர்எஸ்புரம் காவல் எல்லை என தொடர்ச்சியாக சந்தன மரத்தை வெட்டி கடத்திய கடத்தல்காரர்கள், தற்போது சிங்காநல்லூர் காவல் எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தன மரக்கட்டைகளை கடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குனியமுத்தூர் காவல் எல்லை பகுதியான கோவைபுதூர் பகுதியில் சந்தன மர கடத்தல்காரர்கள் தங்களின் வேட்டையைத் துவங்கியுள்ளனர். நேற்று இரவு கோவைப்புதூர் பகுதியில் "எக்ஸ் பிளாக்கில்" சுரேஷ் என்பருக்கு சொந்தமான வீட்டில் இருந்த சுமார் 20 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, அடுத்ததடுத்து 3 வீடுகளில் உள்ள சந்தன மரங்களையும் வெட்டி கடத்தி உள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிங்காநல்லூர் பகுதியில் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தான் குனியமுத்தூர் காவல் நிலையப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்தி உள்ளனரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...