உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்; திருப்பூரில் வெறிச்சோடிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்..!

திருப்பூர்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று துவங்கிய நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் திருப்பூரில் வேட்பு மனு வாங்கவும், அளிக்கவும் வராத நிலையே உள்ளது.


திருப்பூர்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று துவங்கிய நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் திருப்பூரில் வேட்பு மனு வாங்கவும், அளிக்கவும் வராத நிலையே உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக வருகிற 27-ந் தேதியும், அவினாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2-வது கட்டமாக வருகிற 30-ந் தேதியும் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 ஆயிரத்து 295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க 4,91,651 ஆண் வாக்காளர்களும், 5,04,050 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 64 பேர் என மொத்தம் 9,95,765 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.



இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கால் இன்று வேட்பு மனு வாங்கவும், அளிக்கவும் அதிகளவில் யாரும் வராத நிலையே உள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...