கோவை: கோவை அடுத்த ஈச்சனாரி அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளிகள் 3 பேரை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவை அடுத்த ஈச்சனாரி அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளிகள் 3 பேரை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாகவும், அதற்கு பதில் 1000 ரூபாய் நோட்டை வெளியிடுவதாகவும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை போல சமூக வலைத்தளத்தில் பொய்யான பரப்புரைகள் பரப்பப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த மூன்றாம் தேதி ஈச்சனாரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே 60 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2000 ரூபாய் நோட்டு மோசடி விவகாரம் உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் கடந்த 3ம் தேதி ஈச்சனாரி பகுதியில் முட்புதரில் பிணமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சண்முகத்தை கொலை செய்ததாக மதுசூதனன், சதீஸ், மகேஸ்வரன் ஆகிய மூன்று பேரை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சதீஷ் மதுக்கரை ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் எனவும் மகேஸ்வரன் விற்பனை மேலாளர் எனவும் மதுசூதனன் இவர்களின் நண்பர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில், விரைவில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது எனவும் 2000 ரூபாய் நோட்டு வாங்கி கொடுத்தால் அதற்கு ஈடாக 500 ரூபாய் நோட்டு தருவதாக ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் சதீஷ், ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகத்திடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, மேலாளர் சதீஷிடம் 4.25 லட்சம் பணத்திற்கு 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம், அதற்கு ஈடாக 5 லட்சத்திற்கு 2000 ரூபாய் நோட்டுகளை கேரளாவில் உள்ள தனது நண்பர் நவுசாத்திடம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். பணத்தை வாங்கி கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம், அதற்கு ஈடாக 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கி கொடுக்கவில்லை.
இது தொடர்பாக சண்முகத்திடம் கேட்ட போது, கேரளாவில் உள்ள நண்பர் நவ்சாத் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக கூறவே, சண்முகத்தை ஈச்சனாரி பகுதிக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர். இதில் சண்முகம் உயிரிழக்கவே அவரது உடலை ஈச்சனாரி பகுதியில் போட்டுவிட்டு 3 பேரும் தப்பியுள்ளனர். இந்நிலையில் ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் சதீஷ் உட்பட 3 பேரை பிடித்த காவல்துறையினர், கேரளாவில் உள்ள நவ்சாத் என்பவரை தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாகவும், அதற்கு பதில் 1000 ரூபாய் நோட்டை வெளியிடுவதாகவும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை போல சமூக வலைத்தளத்தில் பொய்யான பரப்புரைகள் பரப்பப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த மூன்றாம் தேதி ஈச்சனாரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே 60 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2000 ரூபாய் நோட்டு மோசடி விவகாரம் உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் கடந்த 3ம் தேதி ஈச்சனாரி பகுதியில் முட்புதரில் பிணமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சண்முகத்தை கொலை செய்ததாக மதுசூதனன், சதீஸ், மகேஸ்வரன் ஆகிய மூன்று பேரை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சதீஷ் மதுக்கரை ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் எனவும் மகேஸ்வரன் விற்பனை மேலாளர் எனவும் மதுசூதனன் இவர்களின் நண்பர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில், விரைவில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது எனவும் 2000 ரூபாய் நோட்டு வாங்கி கொடுத்தால் அதற்கு ஈடாக 500 ரூபாய் நோட்டு தருவதாக ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் சதீஷ், ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகத்திடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, மேலாளர் சதீஷிடம் 4.25 லட்சம் பணத்திற்கு 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம், அதற்கு ஈடாக 5 லட்சத்திற்கு 2000 ரூபாய் நோட்டுகளை கேரளாவில் உள்ள தனது நண்பர் நவுசாத்திடம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். பணத்தை வாங்கி கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம், அதற்கு ஈடாக 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கி கொடுக்கவில்லை.
இது தொடர்பாக சண்முகத்திடம் கேட்ட போது, கேரளாவில் உள்ள நண்பர் நவ்சாத் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக கூறவே, சண்முகத்தை ஈச்சனாரி பகுதிக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர். இதில் சண்முகம் உயிரிழக்கவே அவரது உடலை ஈச்சனாரி பகுதியில் போட்டுவிட்டு 3 பேரும் தப்பியுள்ளனர். இந்நிலையில் ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் சதீஷ் உட்பட 3 பேரை பிடித்த காவல்துறையினர், கேரளாவில் உள்ள நவ்சாத் என்பவரை தேடி வருகின்றனர்.