சிங்காநல்லூரில் பழுதடைந்த ஹவுசிங் யூனிட்; புதிய வீடு வழங்க அரசு பொறுப்பேற்க வேண்டும் - நா.கார்த்திக் எம்எல்ஏ

கோவை: சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே உள்ள ஹவுசிங் யூனிட் குடியிருப்பு மிகவும் பழுதடைந்த நிலையில், அதே இடத்தில் புதிய வீடு வழங்க அரசு பொறுப்பேற்க வேண்டும் என சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்தார்.

கோவை: சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே உள்ள ஹவுசிங் யூனிட் குடியிருப்பு மிகவும் பழுதடைந்த நிலையில், அதே இடத்தில் புதிய வீடு வழங்க அரசு பொறுப்பேற்க வேண்டும் என சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே ஹவுசிங் யூனிட் குடியிருப்பு உள்ளது. இங்கு 17.55 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு தற்போது மிகவும் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.



இந்த நிலையில், பழுதடைந்த ஹவுசிங் யூனிட் குடியிருப்பை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிங்காநல்லூரில் உள்ள இந்த ஹவுசிங் யூனிட் குடியிருப்புகள் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்து கிடக்கின்றது. இவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர, சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்ததாகவும், இதுவரை எந்த பதிலும் அரசு தரப்பிலிருந்து தர மறுப்பதாக கூறினார்.



மேலும், இந்த குடியிருப்பில் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் இந்த குடியிருப்புகளுக்கு அனைவரும் சொந்தமாக பணம் செலுத்தியுள்ளதாக கூறிய அவர், அதே இடத்தில் இவர்களுக்கு புதிய குடியிருப்பு கட்டிக்கொடுக்க வேண்டும் எனவும் இதற்கு முழு பொறுப்பையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...