திருநங்கை பாதுகாப்பு திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டாம் - திருநங்கை அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்

கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருநங்கை பாதுகாப்பு திருத்த மசோதாவிற்கு, குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவோ, கையெப்பம் இட வேண்டாமென்று ஒட்டுமொத்த திருநர்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாக திருநங்கை அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி தெரிவித்தார்.

கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருநங்கை பாதுகாப்பு திருத்த மசோதாவிற்கு, குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவோ, கையெப்பம் இட வேண்டாமென்று ஒட்டுமொத்த திருநர்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாக திருநங்கை அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி தெரிவித்தார்.



கோவையில் பல்வேறு திருநங்கை மற்றும் திருநம்பிகளின் அமைப்புகள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருநங்கை பாதுகாப்பு சட்டம் திருத்த மசோதா எங்களை 50 வருடம் பின்னுக்கு தள்ளுவது போல் உள்ளதாகவும், இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார்.

எங்களை சுதந்திரமாக வாழ்வதற்கு, 2014ல் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக இந்த மசோதா உள்ளதாகவும், இந்த மசோதாவில் பாலினத்தை உறுதி செய்ய அறுவை சிகிச்சை செய்ய கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது என தெரிவித்த அவர், திருநங்கைகளுக்கு எதிராக செய்யப்படும் தீவிரமான வன்கொடுமைகளுக்கும், தாக்குதல்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இணையான தண்டனை வழங்க வேண்டும். ஆனால், இந்த மசோதாவில் இரண்டு ஆண்டு தண்டனைகள் மட்டுமே உள்ளது என அவர் கூறினர்.



இந்த மசோதாவில் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பற்றி எதுவும் கூறவில்லை, இதுவும் 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட நால்சா தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், கேரளாவில் வழங்கப்பட்டது போல் திருநர்களுக்கு அடையாள அட்டையானது அவர்களின் சுய விருப்பத்திற்கு ஏற்றது போல் வழங்கப்பட வேண்டும் என்றும் நாடு முழுவதும் எங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முக்கிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை செய்ய ஆவணம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

குறிப்பாக திருத்தங்கள் செய்திருக்கும் இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவோ, கையெப்பம் இட வேண்டாமென்று ஒட்டுமொத்த திருநர்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...