கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பொதுமக்கள் புகாரினை அலட்சியப்படுத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்ய தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பொதுமக்கள் புகாரினை அலட்சியப்படுத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்ய தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூரில் சுற்றுசுவர் இடிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த இடத்தை இன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நேரில் பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், 17 பேரின் உயிரிழப்புக்கு காரணமான சுற்றுவர் அச்சுறுத்தலாக உள்ளதாக பலமுறை இப்பகுதி மக்கள் புகார் கூறியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகளை கண்டறிந்து, அவர்களை தண்டிக்க அரசு தனி குழு அமைத்து வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.
மேலும், வீட்டின் உரிமையாளர் எவ்வாறு கைது செய்யப்பட்டது போல, அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூரில் சுற்றுசுவர் இடிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த இடத்தை இன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நேரில் பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், 17 பேரின் உயிரிழப்புக்கு காரணமான சுற்றுவர் அச்சுறுத்தலாக உள்ளதாக பலமுறை இப்பகுதி மக்கள் புகார் கூறியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகளை கண்டறிந்து, அவர்களை தண்டிக்க அரசு தனி குழு அமைத்து வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.
மேலும், வீட்டின் உரிமையாளர் எவ்வாறு கைது செய்யப்பட்டது போல, அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.