நீலகிரி: தமிழகத்திலேயே முதன் முறையாக நீலகிரி மாவட்ட வனத்துறையில் இளநிலை உதவியாளராக பணியமர்த்தப்பட்ட திருநங்கை தீப்தி இத்துறையில் திறம்பட செயல்படுவேன் என்று தெரிவித்தார்.
நீலகிரி: தமிழகத்திலேயே முதன் முறையாக நீலகிரி மாவட்ட வனத்துறையில் இளநிலை உதவியாளராக பணியமர்த்தப்பட்ட திருநங்கை தீப்தி இத்துறையில் திறம்பட செயல்படுவேன் என்று தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட வன அலுவலகத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்துள்ளார். நீலகிரி வனத்துறையில் பணியாற்றி வந்த கோவை பெரியநாயக்கன்பாளையம் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார்.
உயிரிழந்த சுப்பிரமணியத்தின் மகன் சுதன் ராஜ் திருநங்கையாக மாறிய பின் தனது பெயரை தீப்தி என மாற்றிக் கொண்டார். பி.காம் படித்த இவர் தனது தந்தையின் வாரிசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.

தற்போது கவுண்டம்பாளையத்தில் வசித்து வரும் இவருக்கு உதகையில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

இன்று பணியில் பொறுப்பேற்ற பின் தீப்தி பேசுகையில், என்னைப்போல் சாதிக்க இருக்கும் திருநங்கைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை நிச்சயமாக செய்வேன் என்றும் மேலும் பல துறைகளில் திருநங்கைகள் சாதிக்க வேண்டும் அதற்கு முன்னுதாரணமாக தான் இந்த பணியில் சேர்ந்துள்ளது மிகவும் பெருமையுடன் கருதுவதாக தெரிவித்தார்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் வனத்துறையில் கிடைத்த இப்பணியை மிக சிறப்பாக செய்து தனக்கு இப்பணியில் சேர மிக ஒத்துழைப்பு தந்த தனது தாயாருக்கும் தோழிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட வன அலுவலகத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்துள்ளார். நீலகிரி வனத்துறையில் பணியாற்றி வந்த கோவை பெரியநாயக்கன்பாளையம் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார்.
உயிரிழந்த சுப்பிரமணியத்தின் மகன் சுதன் ராஜ் திருநங்கையாக மாறிய பின் தனது பெயரை தீப்தி என மாற்றிக் கொண்டார். பி.காம் படித்த இவர் தனது தந்தையின் வாரிசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.

தற்போது கவுண்டம்பாளையத்தில் வசித்து வரும் இவருக்கு உதகையில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

இன்று பணியில் பொறுப்பேற்ற பின் தீப்தி பேசுகையில், என்னைப்போல் சாதிக்க இருக்கும் திருநங்கைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை நிச்சயமாக செய்வேன் என்றும் மேலும் பல துறைகளில் திருநங்கைகள் சாதிக்க வேண்டும் அதற்கு முன்னுதாரணமாக தான் இந்த பணியில் சேர்ந்துள்ளது மிகவும் பெருமையுடன் கருதுவதாக தெரிவித்தார்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் வனத்துறையில் கிடைத்த இப்பணியை மிக சிறப்பாக செய்து தனக்கு இப்பணியில் சேர மிக ஒத்துழைப்பு தந்த தனது தாயாருக்கும் தோழிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார்.