நீலகிரி:நீலகிரியில் கீழ் கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் பழங்குடியினர் கிராமத்திற்குச் செல்லும் சாலை 500 மீட்டர் அளவில் பூமிக்குள் உள்வாங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர், புவியியல் துறை ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி:நீலகிரியில் கீழ் கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் பழங்குடியினர் கிராமத்திற்குச் செல்லும் சாலை 500 மீட்டர் அளவில் பூமிக்குள் உள்வாங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர், புவியியல் துறை ஆய்வு மேற்கொண்டனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் கீழ் கோத்தகிரியில் இருந்து சோலூர் மட்டம் வழியாக கரிக்கையூர், பங்களா பாடி போன்ற பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மெட்டுக்கல் என்று பகுதியில் உள்ள சாலை தேயிலைத் தோட்டம் என சுமார் 500 மீட்டர் பரப்பளவில் பூமி 5 அடி அளவிற்கு உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

மேலும், உள்வாங்கிய பகுதியில் இருந்த பாறை சரிந்து, மரங்களும் விழுந்ததால் நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, உள்வாங்கிய பகுதி மெல்ல மெல்ல பூமிக்குள் புதைவதால், மண் வள ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பேராசிரியர் மணிவண்ணன் தலைமையில் இன்று முதல் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பூமி உள்வாங்கிய பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 5 கிராமங்களுக்குச் செல்லும் பழங்குடியினர் பல கிலோ மீட்டர் தூரம் யானை காட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் கீழ் கோத்தகிரியில் இருந்து சோலூர் மட்டம் வழியாக கரிக்கையூர், பங்களா பாடி போன்ற பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மெட்டுக்கல் என்று பகுதியில் உள்ள சாலை தேயிலைத் தோட்டம் என சுமார் 500 மீட்டர் பரப்பளவில் பூமி 5 அடி அளவிற்கு உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

மேலும், உள்வாங்கிய பகுதியில் இருந்த பாறை சரிந்து, மரங்களும் விழுந்ததால் நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, உள்வாங்கிய பகுதி மெல்ல மெல்ல பூமிக்குள் புதைவதால், மண் வள ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பேராசிரியர் மணிவண்ணன் தலைமையில் இன்று முதல் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பூமி உள்வாங்கிய பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 5 கிராமங்களுக்குச் செல்லும் பழங்குடியினர் பல கிலோ மீட்டர் தூரம் யானை காட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.