கோவை: கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துப்பறியும் மோப்ப நாய் ராம்போ உடல் நலக் குறைவால் உயிரிழந்தது.
கோவை: கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துப்பறியும் மோப்ப நாய் ராம்போ உடல் நலக் குறைவால் உயிரிழந்தது.
கோவை மாநகர காவல் துறையில் போலீஸ் துப்பறியும் நாய் படை மற்றும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாநிலம் முழுவதும் காவல் துறையில் உள்ள துப்பறியும் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு ராம்போ என்ற டாபர்மேன் இனத்தைச் சேர்ந்த நாய் பயிற்சியில் இணைக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக மாநகர காவல் துறையில் பணியாற்றி வந்த ராம்போவுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்த மோப்ப நாய் ராம்போ வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் பணியாற்றி பல்வேறு வழக்குகளில் போலீஸாருக்கு உதவியாக இருந்துள்ளது. மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு காவல் துறை சார்பில் திருச்சூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய் கண்காட்சி போட்டியில் மூன்றாம் இடமும், கோவையில் நடைபெற்ற சிறந்த நாய்க்கான போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றது.
இதையடுத்து, ஓய்வு அளிக்கப்பட்ட பிறகும் மாநகர் காவல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 23ம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராம்போ, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.a