நீலகிரி: பச்சை தேயிலைக்கு உரிய விலையினை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென தேயிலை வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: பச்சை தேயிலைக்கு உரிய விலையினை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென தேயிலை வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் 65க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் தேயிலை தொழிலை நம்பி உள்ளனர். கடந்த மாதம் முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் பச்சை பறிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தரத்திலும் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொழிற்சாலைகள் வாங்க மறுப்பதுடன் வாங்கிய இலைகளுக்கும் உரிய விலையை கொடுப்பதில்லை என்று கூறி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென தேயிலை வாரிய அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி, தொழிற்சாலைகளில் அதிகாரிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டு பச்சைத் தேயிலைக்கு உரிய விலை கொடுக்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் 65க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் தேயிலை தொழிலை நம்பி உள்ளனர். கடந்த மாதம் முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் பச்சை பறிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தரத்திலும் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொழிற்சாலைகள் வாங்க மறுப்பதுடன் வாங்கிய இலைகளுக்கும் உரிய விலையை கொடுப்பதில்லை என்று கூறி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென தேயிலை வாரிய அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி, தொழிற்சாலைகளில் அதிகாரிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டு பச்சைத் தேயிலைக்கு உரிய விலை கொடுக்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.