தனிமனிதனின் பொறுப்பற்ற செயலால் 17 உயிர் பலியாகியுள்ளது - சீமான், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்

கோவை: மேட்டுப்பாளையம் நடூரில் வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தினை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனிமனிதனின் பொறுப்பற்ற செயலால் 17 பேரின் உயிர் பலியாகியுள்ளதாக தெரிவித்தார்.

கோவை: மேட்டுப்பாளையம் நடூரில் வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தினை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனிமனிதனின் பொறுப்பற்ற செயலால் 17 பேரின் உயிர் பலியாகியுள்ளதாக தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொறுப்பற்ற செயலால் 17 பேர் உயிர் பலியாகியுள்ளது. வெறும் கற்களை வைத்து சிமெண்ட் வைக்காமல் கட்டியுள்ளதாகவும் உரிமையாளரின் வீட்டு கழிவு நீர் சுவர் அருகே விடப்பட்டுள்ளது, இதை நான் தீண்டாமை சுவராக தான் நான் பார்க்கிறேன். மக்கள் சுவற்றை பற்றி சொல்லப்போனால் நாயை விட்டு துரத்தியுள்ளனர் என்று கூறினார்.

குடியிருந்த இடத்திலேயே வீடு கட்டி தந்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் எனவும் போராடியவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டது தவறு, இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தோல் மேல் கைவைத்து நம்பிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் மனித உயிர்களை விட மதில் சுவர் பெரியதா என கேள்வி எழுப்பியவர், இந்த மக்களின் முகத்தை பார்க்கக்கூடாது என சுவரை கட்டியவர்கள் உறுதியாக கட்டியிருக்க வேண்டும் என்றார்.

இது குறித்து ஏற்கனவே புகார்களைத் தெரிவித்தும் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் ஏற்ற தாழ்வு ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அரசின் இழப்பீடு போதுமானதா ? மனித உயிருக்கு பணம் இழப்பீடு சரிவருமா ? என கேள்வி எழுப்பியவர், போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.இறந்தவர்கள் உடல்களை முறையாக அடக்கம் செய்து எரித்திருக்க வேண்டும். ஆனால் அரசு அவசர அவசரமாக அவர்களது உடலை எரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...