கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என அரசிற்கு அறிவுறித்தியுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என அரசிற்கு அறிவுறித்தியுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய தலைவர் ராம் சங்கர் காத்தரியா, துணை தலைவர் முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுடெல்லியில் இருந்து இன்று மேட்டுப்பாளையம் வந்த உயிரிழப்பு நடந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினர். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன் பின் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக அறிவித்துள்ள நிலையில் ரூ.4 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.6 லட்சம் உடனே வழங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அரசு வேலை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றார். போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனவும் சுற்று சுவரின் உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சுற்று சுவர் உரிமையாளர் வண்மை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டதிற்கு, இச்சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின் தெரிவிக்கப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் கூறினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய தலைவர் ராம் சங்கர் காத்தரியா, துணை தலைவர் முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுடெல்லியில் இருந்து இன்று மேட்டுப்பாளையம் வந்த உயிரிழப்பு நடந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினர். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன் பின் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக அறிவித்துள்ள நிலையில் ரூ.4 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.6 லட்சம் உடனே வழங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அரசு வேலை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றார். போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனவும் சுற்று சுவரின் உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சுற்று சுவர் உரிமையாளர் வண்மை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டதிற்கு, இச்சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின் தெரிவிக்கப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் கூறினார்.