கோவை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் அரசியல் வாழ்வு முடிவடைந்து விட்டதாக அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் அரசியல் வாழ்வு முடிவடைந்து விட்டதாக அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், அமமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் தைரியமும், வீரமும், ஆற்றலையும் எந்த தலைவரிடமும் பார்க்க முடியாது எனவும், ஜெயலலிதா மரணம் இந்திய நாட்டிற்கே பேரிழப்பு எனவும் தெரிவித்தார். அதிமுகவை மிக அதிகமாக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளேன் எனவும், அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளேன் எனவும் அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 4 முறை மேட்டூர் அணை நிரம்பியுள்ளது எனவும், 30 வருடங்களாக நிரம்பாத ஏரி, குளங்கள் நிரம்பி பசுமை தயாகமாக தமிழ்நாடு விளங்குவதாக தெரிவித்த அவர், அதிமுக அரசையும், கட்சியையும் காக்க வேறு வழியின்றி முதலமைச்சரையும், ஆட்சியையும் பாராட்டி வருகிறேன் எனவும், மிக விரைவில் அதிமுகவில் இணையும் விழா நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
திமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இல்லை எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் அரசியல் வாழ்வு முடிவடைந்து விட்டதாக கூறிய அவர், டிடிவி தினகரனை சசிகலா ஆதரிக்க மாட்டார் என்று கூறினார். அமமுக கட்சி பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்தற்கு, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததாக தவறான செய்தி வெளியாகியுள்ளது எனவும் வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், அமமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் தைரியமும், வீரமும், ஆற்றலையும் எந்த தலைவரிடமும் பார்க்க முடியாது எனவும், ஜெயலலிதா மரணம் இந்திய நாட்டிற்கே பேரிழப்பு எனவும் தெரிவித்தார். அதிமுகவை மிக அதிகமாக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளேன் எனவும், அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளேன் எனவும் அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 4 முறை மேட்டூர் அணை நிரம்பியுள்ளது எனவும், 30 வருடங்களாக நிரம்பாத ஏரி, குளங்கள் நிரம்பி பசுமை தயாகமாக தமிழ்நாடு விளங்குவதாக தெரிவித்த அவர், அதிமுக அரசையும், கட்சியையும் காக்க வேறு வழியின்றி முதலமைச்சரையும், ஆட்சியையும் பாராட்டி வருகிறேன் எனவும், மிக விரைவில் அதிமுகவில் இணையும் விழா நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
திமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இல்லை எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் அரசியல் வாழ்வு முடிவடைந்து விட்டதாக கூறிய அவர், டிடிவி தினகரனை சசிகலா ஆதரிக்க மாட்டார் என்று கூறினார். அமமுக கட்சி பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்தற்கு, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததாக தவறான செய்தி வெளியாகியுள்ளது எனவும் வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.