கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நகர செயலாளர் மயில் கணேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மவுன ஊர்வலமாக சென்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் நகர செயலாளர் மயில் கணேசன்.வழக்கறிஞர் பெருமாள், சௌந்தர், நரசப்பன், மோகன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல, வால்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி வால்பாறை நகர கழகம் சார்பாக காந்தி சிலை வளாகத்தில் நகர கழக செயலாளர் நெல்லை செல்வன் தலைமையில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குஞ்சாலி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாபுஜி, மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் சண்முகவேல், மாவட்ட மகளிர் துணை தலைவி சிவகாமி, நகரக் கழக துணைச் செயலாளர் செல்வின் லாய் மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.