கோவை: மேட்டுப்பாளையத்தில் சுற்று சுவர் இடிந்து 17 பேர் உயிரிழக்க காரணமான எஞ்சிய சுவரை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையத்தில் சுற்று சுவர் இடிந்து 17 பேர் உயிரிழக்க காரணமான எஞ்சிய சுவரை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் மாடி வீட்டு சுற்றுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அளவுக்கு அதிகமான 20 அடி உயரத்தில் போதிய பில்லர்கள் அமைக்கப்படாமல் சுவர் எழுப்பியது உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது. மேலும் இந்த சுவர் தீண்டாமை சுவர் எனவே இதனை முழுவதுமாக இடித்து அகற்ற பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் சுரேஷ் குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் இன்று எஞ்சிய சுவரை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

20 அடி உயர சுவரை இரண்டு ஜே.சி.பி எந்திரங்களை கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. மேலும் அதே பகுதியில் ஆபத்தாக உள்ள மற்றொரு சுவரும் அகற்ற முற்பட்ட போது, அதற்கு அந்த பகுதியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து முதல் கட்டமாக சர்ச்சைக்குரிய சுவற்றை அகற்றும் பணி தொடர்ந்து விரு விருப்பாக அகற்றப்பட்டு வருகிறது.