கோவை: கோவை உக்கடம் அருகே வீட்டு ஜன்னலில் சுடிதார் துப்பட்டாவை மாட்டி விளையாண்டு கொண்டிருந்த சிறுவன் கழுத்து இறுகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை உக்கடம் அருகே வீட்டு ஜன்னலில் சுடிதார் துப்பட்டாவை மாட்டி விளையாண்டு கொண்டிருந்த சிறுவன் கழுத்து இறுகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் காவல் எல்லைக்குட்பட்ட ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த சதாகத்துல்லாவின் மகன் காஜா உசேன் (10). இவர் அதே பகுதியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சிறுவன் காஜா உசேன் பள்ளி முடிந்து வந்து வழக்கம் போல வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.
அதேபோல சிறுவனின் சகோதரி வீட்டில் தூய்மைப் பணியில் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் பெற்றோர் யாரும் இல்லாத நிலையில், சிறுவனின் கழுத்தில் துப்பட்டா இறுக்கிய நிலையில் மயக்கத்தில் இருந்தார். இதை தொடர்ந்து பெற்றோர் சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் பலியானது தெரிய வந்துள்ளது.
கோவை உக்கடம் காவல் எல்லைக்குட்பட்ட ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த சதாகத்துல்லாவின் மகன் காஜா உசேன் (10). இவர் அதே பகுதியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சிறுவன் காஜா உசேன் பள்ளி முடிந்து வந்து வழக்கம் போல வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.
அதேபோல சிறுவனின் சகோதரி வீட்டில் தூய்மைப் பணியில் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் பெற்றோர் யாரும் இல்லாத நிலையில், சிறுவனின் கழுத்தில் துப்பட்டா இறுக்கிய நிலையில் மயக்கத்தில் இருந்தார். இதை தொடர்ந்து பெற்றோர் சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் பலியானது தெரிய வந்துள்ளது.