நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் உதகை அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் வீடுகளிலும் விவசாய நிலங்களிலும் வியாபார கடைகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் மழை நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் உதகை அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் வீடுகளிலும் விவசாய நிலங்களிலும் வியாபார கடைகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் மழை நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மேலும், கடைகளில் தேங்கியுள்ள மழை நீரால் அத்தியாவசிய பொருட்கள் பெருமளவு சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. நீலகிரியில் இன்று காலை வரை 790.8 மில்லி மீட்டர் மழைப் பெய்துள்ளது. குறிப்பாக குன்னூரில் அதிக பட்சமாக 132 ம.மீட்டர் மழையும், காேடநாட்டில் 107 ம.மீ மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு மேல் நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் வெகுவாக பாதிப்டைந்துள்ளனர். குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வப்பாேது மண் சரிவு மற்றும் மரங்கள் விழுவதாலும் பாறைகள் விழுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் காேத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
இதேபோல், மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதால் நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது. அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் வாகனத்தை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கடைகளில் தேங்கியுள்ள மழை நீரால் அத்தியாவசிய பொருட்கள் பெருமளவு சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. நீலகிரியில் இன்று காலை வரை 790.8 மில்லி மீட்டர் மழைப் பெய்துள்ளது. குறிப்பாக குன்னூரில் அதிக பட்சமாக 132 ம.மீட்டர் மழையும், காேடநாட்டில் 107 ம.மீ மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு மேல் நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் வெகுவாக பாதிப்டைந்துள்ளனர். குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வப்பாேது மண் சரிவு மற்றும் மரங்கள் விழுவதாலும் பாறைகள் விழுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் காேத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
இதேபோல், மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதால் நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது. அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் வாகனத்தை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.