மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு காரணமான சக்கரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை. திருவள்ளுவன் உள்ளிட்டோரை காவல் துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர்.

இந்நிலையில், நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரை தாக்கிய காவல் துறையினரை கண்டித்தும், 17 பேர் உயிரிழக்க காரணமான சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 



இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக, விசிக,மே 17 இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.17 பேர் உயிரிழக்க காரணமான சுவர் தீண்டாமை சுவர் எனவும், இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புகளுக்கு காரணம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.



மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீடு, அரசு வேலை மற்றும் புதிய வீடுகள் கட்டி தர வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...