மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம்; சாதிய அமைப்பு கூட்டமைப்பினர் 25 பேர் மீது வழக்கு பதிவு

கோவை: மேட்டுப்பாளையத்தில் நேற்று உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாதிய அமைப்பு கூட்டமைப்பினர் 25 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் நேற்று உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாதிய அமைப்பு கூட்டமைப்பினர் 25 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் மாடி வீட்டின் சுற்று சுவர் இடிந்து அருகில் இருந்த நான்கு வீடுகளின் மீது விழுந்த கோர விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அரசு வேலை, வீட்டு உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இறந்தவரின் குடும்பத்தினரை ஒன்று சேர்த்து நேற்று தமிழ் புலிகள், திராவிட தமிழர் கட்சி, விடுதலை முன்னணி உள்ளிட்ட சாதிய அமைப்புகள் உடலை வாங்க மறுத்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர். மேலும் மருத்துவமனையை முற்றுகையிட்டு குவிந்தனர்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் காவல்துறையினர் பேச்சு நடத்தியும் கலைய மறுத்ததால் சேலான தடியடி நடத்தினர். குறிப்பாக, இதற்கு காரணமாக இருந்த தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, சமத்துவ கழக தலைவர் வெண்மணி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஹரிமன்னன் உட்பட 25 பேரைக் காவல்துறை நேற்று கைது செய்த நிலையில், அவர்கள் மீது, சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்யாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை மதுக்கரை நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...