கோவையில் காதலர்கள் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக் கொண்ட சம்பவம்: சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலர் கைது
கோவை: கோவை சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு அனுப்பிய அந்தரங்க புகைப்படத்தை காதலன் சமூகவலைதளத்தில் வெளியிட்டதையடுத்து போலீசார் காதலனை கைது செய்துள்ளனர்.
கோவை சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து கொண்டே இளம்பெண் ஒருவர் கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணுக்கு முகநூல் மூலமாக இளைஞர் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது . இப்படியிருக்க இருவரும் செல்போன் மூலமாக அடிக்கடி சாட்டிங் செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படியிருக்க, ஒரு நாள் இருவரும் சாட்டிங் செய்த போது இருவரும் அவர்களது அந்தரங்க
படங்களை பரிமாறிக் கொண்டனர்.
ஆனால், தனது காதலி தனக்கு அனுப்பிய புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்ட காதலன், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதைதொடர்ந்து, காதலி தனது பெற்றோர் துணையுடன் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானலை சேர்ந்த அஜித் (19) என்பவரை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர் காதலி தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரத்தில் அந்த படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் மீது போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 417, 506 (1), தகவல் தொழில்நுட்ப சட்டம் 6E, மற்றும் 67(A) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.