கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுச் சுவரை எழுப்பியவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ள 4 லட்சம் இழப்பீடு 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுச் சுவரை எழுப்பியவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ள 4 லட்சம் இழப்பீடு 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் தனியார் துணிக்கடை உரிமையாளர் எழுப்பியிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் துணிக்கடை உரிமையாளருக்குச் சொந்தமான இடம் நடூரில் உள்ளன. இந்த இடத்தில் சுமார் 80 அடி நீளத்திற்கும் 20 அடி உயரத்திற்கும் ஒரு சுற்றுச் சுவரை அதன் துணிக் கடை உரிமையாளர் எழுப்பி இருக்கிறார். இந்த சுற்றுச்சுவர் பாதுகாப்பில்லாத நிலையில், சரியான அடித்தளம் அமைக்காத வகையில் கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த இடத்திற்கு நெருக்கமாக அருந்ததியர் மக்கள் வாழ்வதால் தீண்டாமை மனப்பான்மையின் காரணமாகவே இந்த சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டதாக அப்பகுதியில் வாழும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தீண்டாமை சுவர் என்று அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு போராட்டம் நடத்தி அரசு அலுவலர்களிடம் புகாரும் அளித்துள்ளனர்.
இந்த சுற்றுச்சுவரினால் அந்தப்பகுதியில் வாழ்ந்த தலித் மக்கள் குடியிருப்புகளுக்கு மழைக்காலத்தில் மிகப் பெரிய சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றது. தீண்டாமை உணர்வின் காரணமாக எழுப்பப்பட்ட இந்த பலமில்லாத சுற்றுச்சுவர் கனமழையில் நள்ளிரவில் இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள வீடுகளில் 17 பேர் தூங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டிருப்பதாக கூறினார்.
இந்த நிலையில், உயிர் இழப்புகளுக்கு காரணமான துணிக்கடை அதிபர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இது தீண்டாமை சுவர் என்று அருந்ததியர் மக்கள் போராட்டம் நடத்தியும் புகார் அளித்தும் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ள 4 லட்சம் இழப்பீடு 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் தனியார் துணிக்கடை உரிமையாளர் எழுப்பியிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் துணிக்கடை உரிமையாளருக்குச் சொந்தமான இடம் நடூரில் உள்ளன. இந்த இடத்தில் சுமார் 80 அடி நீளத்திற்கும் 20 அடி உயரத்திற்கும் ஒரு சுற்றுச் சுவரை அதன் துணிக் கடை உரிமையாளர் எழுப்பி இருக்கிறார். இந்த சுற்றுச்சுவர் பாதுகாப்பில்லாத நிலையில், சரியான அடித்தளம் அமைக்காத வகையில் கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த இடத்திற்கு நெருக்கமாக அருந்ததியர் மக்கள் வாழ்வதால் தீண்டாமை மனப்பான்மையின் காரணமாகவே இந்த சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டதாக அப்பகுதியில் வாழும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தீண்டாமை சுவர் என்று அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு போராட்டம் நடத்தி அரசு அலுவலர்களிடம் புகாரும் அளித்துள்ளனர்.
இந்த சுற்றுச்சுவரினால் அந்தப்பகுதியில் வாழ்ந்த தலித் மக்கள் குடியிருப்புகளுக்கு மழைக்காலத்தில் மிகப் பெரிய சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றது. தீண்டாமை உணர்வின் காரணமாக எழுப்பப்பட்ட இந்த பலமில்லாத சுற்றுச்சுவர் கனமழையில் நள்ளிரவில் இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள வீடுகளில் 17 பேர் தூங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டிருப்பதாக கூறினார்.
இந்த நிலையில், உயிர் இழப்புகளுக்கு காரணமான துணிக்கடை அதிபர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இது தீண்டாமை சுவர் என்று அருந்ததியர் மக்கள் போராட்டம் நடத்தியும் புகார் அளித்தும் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ள 4 லட்சம் இழப்பீடு 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.