கா.க புதூர் சமுதாய நல பணிகளை உடனடியாக துவக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு - இளைஞர் மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு

கோவை: கா.க புதூர் சமுதாய நல பணிகளை உடனடியாக துவக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அனைத்து இளைஞர் மாணவர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கோவை: கா.க புதூர் சமுதாய நல பணிகளை உடனடியாக துவக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அனைத்து இளைஞர் மாணவர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். 



கோவை மாவட்டம் ஆனைமலை வட்ட அனைத்து இளைஞர் மாணவர் கூட்டமைப்பினர் இன்று தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது அறியாமல் மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஆனைமலை வட்டம் கா.க புதூரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு ஆறு மாவட்டங்களில் சமுதாய நலக்கூட பணிகளுக்கு மூன்று கோடியே ஐந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கா.க புதூர் சமுதாய நலகூடதிற்கு 55 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓராண்டுகளுக்கு மேல் ஆகியும், ஆளுங்கட்சியினர் தலையீட்டால் இந்த பணிகள் துவக்கப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினர்.

மேலும், சமுதாய கூட பணிகளை உடனடியாக துவக்கிட வேண்டும் எனவும் இல்லையெனில் பொதுமக்களோடு இணைந்து வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...