நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா போன்ற பகுதிகளில் மழை மற்றும் மூடுபனி காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா போன்ற பகுதிகளில் மழை மற்றும் மூடுபனி காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா போன்றப்பகுதிகளி்ல் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா போன்றப் பகுதிகளி்ல் அடர்ந்த மேக மூட்டமும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழையுடன் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த மழையின் காரணமாக தாேட்ட வேலைக்குச் செல்ல முடியாமல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
தொடர் மழையால் மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா போன்றப்பகுதிகளி்ல் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா போன்றப் பகுதிகளி்ல் அடர்ந்த மேக மூட்டமும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழையுடன் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த மழையின் காரணமாக தாேட்ட வேலைக்குச் செல்ல முடியாமல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
தொடர் மழையால் மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.