தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறாது - கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்

நீலகிரி: உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தமிழகத்தின் பங்கான ரூ.3000 கோடியை மத்திய அரசிடமிருந்து வாங்க முடியவில்லை எனவும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

நீலகிரி: உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தமிழகத்தின் பங்கான ரூ.3000 கோடியை மத்திய அரசிடமிருந்து வாங்க முடியவில்லை எனவும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

உதகையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரும்பாலான சிங்களர் ஒட்டுக்களால் தான் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார் எனவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகார பகிர்வு அளித்து இந்திய மாநிலங்கள் போல் உரிமை வழங்கினால் தான் தமிழர்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்றார்.

ராஜீவ் காந்தி செய்து கொடுத்த ஒப்பந்தத்தை மோடியும் கோத்தபயவும் செயல்படுத்த தவறினால் அங்கு பல சிரமங்கள் ஏற்படும் என்றும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் "ஆள் தூக்கி" உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பணபலம் அதிகாரம் படைத்தவர்கள் தான் பதவிகளில் அமர்வார்கள், இதை காங்கிரஸ் உட்பட தோழமை கட்சிகள் எதிர்க்கும் என்று தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தமிழகத்தின் பங்கான 3000 கோடி ரூபாயை மத்திய அரசிடமிருந்து வாங்க முடியவில்லை என்று கூறிய அவர், உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறாது எனவும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது எனவும் தமிழகத்தில் 75% ஏழை குடும்பங்கள் உள்ளதால் இவர்களுக்கு இது சாத்தியமில்லை என்று கூறினார்.

மேலும், விண்வெளியில் இருக்கும் வெற்றிடத்தை கண்டுபிடிப்பதே கஷ்டம், இதில் ரஜினி எந்த கேமரா மூலம் தமிழகத்தில் வெற்றிடத்தை கண்டுபிடித்தார் என்று கேள்வி எழுப்பிய அவர், வெற்றிடம் என்ற பெயரில் வேண்டுமானால் சினிமா தயாரிக்கலாம் என்றும் ரஜினி, கமல் இணைந்தால் அவர்களுக்கு தான் பாதிப்பு கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.

அதேபோல, பிரதமர் மோடி அரசு திட்டமிட்டே பொதுத்துறை நிறுவனங்களை அழித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், அமெரிக்க அரசு விளை பொருட்களுக்கு 100% விலை கொடுக்கிறது ஆனால் இங்கு 50% விலை கூட கிடைப்பதில்லை பச்சை தேயிலைக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்று கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...