உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக, சமத்துவ மக்கள் கட்சிகள் தயாராக உள்ளது - சரத்குமார்

கோவை: தமிழகத்தில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்ற சூழலில், உள்ளாட்சி தேர்தலைக் சந்திக்க அதிமுகவும், சமத்துவ மக்கள் கட்சியும் தயாராக உள்ளது எனவும் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த பாக்யராஜ் கருத்து பெண் இனத்திற்கு எதிரான கருத்து இல்லை என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

கோவை: தமிழகத்தில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்ற சூழலில், உள்ளாட்சி தேர்தலைக் சந்திக்க அதிமுகவும், சமத்துவ மக்கள் கட்சியும் தயாராக உள்ளது எனவும் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த பாக்யராஜ் கருத்து பெண் இனத்திற்கு எதிரான கருத்து இல்லை என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்ககளை சந்தித்துப் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் தடை கோரி வழக்கு போட அவர்களுக்கு உரிமை உண்டு, அதேசமயம், நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்ற சூழலில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுகவும் சமத்துவ மக்கள் கட்சியும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் எனவும் உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் வர வேண்டும் என்று கூறிய அவர், மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்ததாகவும், பின்னர் மக்களை கேட்காமல் இருவரும் பிரிந்து ஆட்சி அமைத்தது தவறு என்றார்.

மேலும், எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் இருக்க மக்களை கேட்ட பிறகு தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் எனவும் மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு தான் பெரும்பான்மை உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல, மாவட்டங்களைப் பிரிப்பதன் மூலம் நிர்வாகம் சிறந்த முறையில் இயங்கும் எனவும் இது இரு சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும் என கூறிய சரத்குமார், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதை தடுக்க சிறுவயதிலிருந்தே பாலியல் கல்வி என்பது அவசியம் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் கொடுமைகளுக்கு சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்று கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...