கோவை: பிரதமர் மோடி வரலாறு தெரியாமல், லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தும் பெண்களை வன்கொடுமை செய்த கோத்தபய ராஜபக்சவின் அரசுக்கு, பயங்கர வாதிகளை எதிர்கொள்ள ரூ.350 கோடி ரூபாயும் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.2800 கோடியும் தர போகிறோம் என்று சொல்லியிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார்.
கோவை: பிரதமர் மோடி வரலாறு தெரியாமல், லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தும் பெண்களை வன்கொடுமை செய்த கோத்தபய ராஜபக்சவின் அரசுக்கு, பயங்கர வாதிகளை எதிர்கொள்ள ரூ.350 கோடி ரூபாயும் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.2800 கோடியும் தர போகிறோம் என்று சொல்லியிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார்.
இலங்கையில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்று, அதிபராக பதவியேற்றார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, கோத்தபயா ராஜபக்சே, நேற்று முன்தினம் மாலை டில்லி வந்தார். நேற்று, ஜனாதிபதி மாளிகைக்கு வந்த கோத்தபயாவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் வரவேற்றனர். இதன் பின், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், அணி வகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
மேலும், இலங்கையில், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், 3,150 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக, இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சேவிடம், பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
இந்த நிலையில், கோவை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இடிமேல் இடியாக இலங்கையில் தமிழினத்திற்கு அடிவிழுகிறது என்றும் பிரதமர் மோடி வரலாறு தெரியாமல் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து பெண்களைக் வன்கொடுமை செய்த கோத்தபயா ராஜபக்சவின் அரசுக்கு பயங்கர வாதிகளை எதிர்கொள்ள ரூ.350 கோடி ரூபாயும் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.2800 கோடியும் தருவதாக விமர்சனம் செய்தார்.
கொலைகார பாவிக்கு பட்டம் கொடுத்து, பரிசு கொடுத்திருக்கிறார்கள் என்று கூறிய அவர், கொலைகார கோத்தபயா ராஜபக்சேவுடன் கை குலுக்குவதற்காக, ஈழம் தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் மோடி காவு கொடுத்திருப்பது தாங்கமுடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இரக்கமற்றவரும், இதயமில்லாதவருமான மோடிக்கு மதிமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவிப்பதாக கூறிய அவர், உள்ளாட்சி தேர்தலுக்கு திமுகவும், திமுக தலைமையிலான அணியும் தயாராக இருக்கிறது. ஆனால், முழுமையாக வார்டு மறுவரையும் செய்யாமல் மாவட்டங்களைப் பிரிப்பதில் அதிமுக அரசு மும்மரம் காட்டுவதாக கூறினார். மேலும், மற்ற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் அதிகமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடப்பது வேதனையளிப்பதாக வைகோ கூறினார்.