கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு; முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு வலைவீச்சு

கோவை: கோவை அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரையடுத்து 4 பேர் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரையடுத்து 4 பேர் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது உறவினரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 26ம் தேதி சிறுமி அவரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட காதலனுடன் அதே பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டனுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த கார்டனுக்குள் இருந்த சுமார் 6 பேர் கொண்ட கும்பல் 17 வயது சிறுமியின் காதலரை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். அத்துடன் அந்த இளைஞரை புகைப்படமும் எடுத்துள்ளனர். பிறகு அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவும் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தரப்பில் கடந்த 28ம் தேதி ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராகுல் (21), பிரகாஷ்(22), கார்த்திகேயன்(28) மற்றும் நாராயண மூர்த்தி(30) ஆகியோரை போலீஸார் கைது செய்து போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் அவரது நண்பரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதேசமயம், இந்த சம்பவம் கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லை என காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...