திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகநாத சுவாமி திருக்கோயில் சுவற்றை துளையிட்டு உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகநாத சுவாமி திருக்கோயில் சுவற்றை துளையிட்டு உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் அடுத்த திருமுருகன் பூண்டி அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு சொந்தமான திருமுருகநாத சுவாமி திருக்கோயில் இருந்து வருகிறது.

மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் கோவிலின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு உள்ளே சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கோவிலுக்குள் சென்ற போது கோவிலின் அன்னதான உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததாகவும், அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்
இதனையடுத்து, அறநிலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டபோது, கோவில் சுவர் துளையிடப்பட்டது உண்மை எனவும் ஆனால், உண்டியலில் இருந்த பணம், நகை போன்ற எதுவும் கொள்ளை போகவில்லை என்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை துணியால் மூடிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அறநிலையத்துறைக்கும், தொல்லியல் துறைக்கு சொந்தமான கோவிலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திருமுருகன் பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் அடுத்த திருமுருகன் பூண்டி அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு சொந்தமான திருமுருகநாத சுவாமி திருக்கோயில் இருந்து வருகிறது.

மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் கோவிலின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு உள்ளே சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கோவிலுக்குள் சென்ற போது கோவிலின் அன்னதான உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததாகவும், அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்
இதனையடுத்து, அறநிலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டபோது, கோவில் சுவர் துளையிடப்பட்டது உண்மை எனவும் ஆனால், உண்டியலில் இருந்த பணம், நகை போன்ற எதுவும் கொள்ளை போகவில்லை என்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை துணியால் மூடிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அறநிலையத்துறைக்கும், தொல்லியல் துறைக்கு சொந்தமான கோவிலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திருமுருகன் பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.