கோவை: வால்பாறையை அடுத்துள்ள இஞ்சிப்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் விஷக்குளவி கடித்து 15 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறையை அடுத்துள்ள இஞ்சிப்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் விஷக்குளவி கடித்து 15 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது இஞ்சிப்பாறை எஸ்டேட். இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் உள்ள வனப்பகுதியில் கூட்டில் இருந்து விஷக்குளவி திடீரென பறந்து வந்து கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களை தாக்கத்தொடங்கியுது.
இதனால் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடத் துவங்கினர். இருப்பினும் ஓடிய தொழிலாளர்களை தலை, கை, கால், முகம் ஆகிய இடங்களில் விஷக்குளவி கடித்தன. இச்சம்பவத்தில் 15 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தேயிலை தோட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பஞ்சவர்ணம், அற்புதமணி, மாரியம்மாள், ஞானத்தாய் ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.