கோவை: மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனங்களைத் திருடும் பைக் கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனங்களைத் திருடும் பைக் கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை சாலையில் வ.உ.சி காலணியைச் சேர்ந்தவர் அப்துல் வகாப். இவரது இருசக்கர வாகனம் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் காணாமல் போனது. பின்னர் இதுகுறித்து அப்துல் வகாப் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து, மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு நகர பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணங்களை காண்பிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததில் சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அபுதாகீர் (24) என்பது தெரியவந்தது, இவர் மீது ஏற்கனவே பைக் கடத்தல் சம்பந்தமாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் வீடுகளில் புகுந்து இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்ததுடன் கடந்த வாரம் வ.உ.சி காலனி பகுதியில் பைக்கை திருடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவர் வந்த வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அபுதாகீர் மீது வழக்கு பதிவு செய்து கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை சாலையில் வ.உ.சி காலணியைச் சேர்ந்தவர் அப்துல் வகாப். இவரது இருசக்கர வாகனம் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் காணாமல் போனது. பின்னர் இதுகுறித்து அப்துல் வகாப் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து, மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு நகர பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணங்களை காண்பிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததில் சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அபுதாகீர் (24) என்பது தெரியவந்தது, இவர் மீது ஏற்கனவே பைக் கடத்தல் சம்பந்தமாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் வீடுகளில் புகுந்து இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்ததுடன் கடந்த வாரம் வ.உ.சி காலனி பகுதியில் பைக்கை திருடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவர் வந்த வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அபுதாகீர் மீது வழக்கு பதிவு செய்து கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.