கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகருக்கு கொண்டு செல்ல உள்ள புதிய குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகருக்கு கொண்டு செல்ல உள்ள புதிய குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கும் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கென 20 குடிநீர் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது கூடுதலாக கோவை மாநகருக்கு 295 மில்லியன் லிட்டரும், திருப்பூர் மாநகராட்சிக்கு 196 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கவும், தலா 1000 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
ஏற்கனவே உள்ள குடிநீர் திட்டங்களுக்கே வறட்சி கால கட்டத்தில் குடிநீர் எடுக்க முடியாமல் திண்டாடி வரும் நிலையில், இதுபோன்ற புதிய திட்டங்களால் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதுடன் 16 குடிநீர் திட்டங்கள் முடங்கும் என குற்றம்சாட்டிய பொதுமக்கள், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகருக்கு கொண்டு செல்ல உள்ள புதிய குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கும் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கென 20 குடிநீர் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது கூடுதலாக கோவை மாநகருக்கு 295 மில்லியன் லிட்டரும், திருப்பூர் மாநகராட்சிக்கு 196 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கவும், தலா 1000 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
ஏற்கனவே உள்ள குடிநீர் திட்டங்களுக்கே வறட்சி கால கட்டத்தில் குடிநீர் எடுக்க முடியாமல் திண்டாடி வரும் நிலையில், இதுபோன்ற புதிய திட்டங்களால் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதுடன் 16 குடிநீர் திட்டங்கள் முடங்கும் என குற்றம்சாட்டிய பொதுமக்கள், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகருக்கு கொண்டு செல்ல உள்ள புதிய குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.