திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பூர் மாநகர பகுதியான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மாட்டு கொட்டாய், பாரதியார் வணிக வளாகம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் கடை வைத்து நடத்தி வருபவர்கள் ஒரு வருடமாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர்.
மேலும், இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தது.

பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இல்லாததால், மாநகராட்சி வருவாய் உதவி ஆணையர் தங்கவேல் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் 15 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

திருப்பூர் மாநகர பகுதியான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மாட்டு கொட்டாய், பாரதியார் வணிக வளாகம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் கடை வைத்து நடத்தி வருபவர்கள் ஒரு வருடமாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர்.
மேலும், இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தது.

பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இல்லாததால், மாநகராட்சி வருவாய் உதவி ஆணையர் தங்கவேல் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் 15 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.