திருப்பூர்: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் வெங்காயத்தினை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் வெங்காயத்தினை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெங்காயம் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாயை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், கடுமையாக உயர்ந்துள்ள வெங்காய விலை உயர்வால் நடுத்தரக் குடும்பத்தினர் அதனை வாங்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகி இருப்பதாகவும் மத்திய அரசு வெங்காயம் பதுக்குவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மிஷின் வீதி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் வெங்காயத்தினை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெங்காயம் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாயை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், கடுமையாக உயர்ந்துள்ள வெங்காய விலை உயர்வால் நடுத்தரக் குடும்பத்தினர் அதனை வாங்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகி இருப்பதாகவும் மத்திய அரசு வெங்காயம் பதுக்குவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மிஷின் வீதி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் வெங்காயத்தினை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.