கோவை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பியுசிஎல் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பியுசிஎல் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை இந்தியா வந்துள்ளார். டெல்லியில் இன்று பிரதமர் மோடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அரசியல் தலைவர்களை சந்திக்கிறார். இந்நிலையில், கோத்தபய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பி.யு.சி.எல் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த கோத்தபய ராஜபக்சேவை பாஜக இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து உபசரிப்பதை கண்டித்தும், சர்வதேச போர்க்குற்றவாளியை உடனே இந்தியாவில் இருந்து திரும்பிப்போக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொலை குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவே திரும்பி போ என பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோசங்களை எழுப்பினர்.

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை இந்தியா வந்துள்ளார். டெல்லியில் இன்று பிரதமர் மோடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அரசியல் தலைவர்களை சந்திக்கிறார். இந்நிலையில், கோத்தபய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பி.யு.சி.எல் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த கோத்தபய ராஜபக்சேவை பாஜக இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து உபசரிப்பதை கண்டித்தும், சர்வதேச போர்க்குற்றவாளியை உடனே இந்தியாவில் இருந்து திரும்பிப்போக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொலை குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவே திரும்பி போ என பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோசங்களை எழுப்பினர்.