திருப்பூரில் ரூ.46 ஆயிரம் பழைய நோட்டுடன் தவித்த 2 மூதாட்டிகள்; முதியோர் உதவித்தொகை வழங்க ஆட்சியர் ஏற்பாடு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பூமலூர் பகுதியில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பூமலூர் பகுதியில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பூமலூர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள்(75), தங்கம்மாள்(78). இவர்கள் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போன சமயத்தில், இவரது பிள்ளைகள் பணம் ஏதாவது வைத்துள்ளீர்களா என்று கேட்டதற்கு, ஆம் எங்களது இறுதிகால தேவைக்காக வைத்திருப்பதாக கூறி, அவர்களிடமிருந்த 46 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர்.

ஆனால், அந்த 46 ஆயிரம் ரூபாயும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள். பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாத இந்த இரு மூதாட்டிகள் தங்களுடைய இறுதி கால தேவைக்காக, பல்வேறு வேலைகளுக்கு சென்று சிறுக சிறுக சேமித்த பணம் இப்படி செல்லாமல் ஆகிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.



இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அந்த இரு மூதாட்டிகளுக்கும் இன்று அரசின் சார்பில் உதவிகளை செய்து கொடுத்தார். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர், பணமதிப்பிழப்பு செய்தது தெரியாமல் மூதாட்டிகள் வைத்திருந்த 46 ஆயிரம் ரூபாய் ( பழைய 500 மற்றும் 1000 ரூபாய்) பணத்தை வங்கிகள் மூலம் மாற்ற முடியாது என்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் மூதாட்டிக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இரு மூதாட்டிகளுக்கும் அரசின் சார்பில் மாதாமாதம் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...