கோவை: மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமிற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை: மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமிற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. கோவில்களில் ஆலய பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் யானைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வையும் அதன் உடல் நலத்தை பாதுகாக்கவும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தாண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமானது டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான முதற்கட்ட பணிகள் தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடைபெறும் இடத்தில் துவங்கியுள்ளது.

யானைகள் கட்டிவைக்கப்படும் இடம், பாகன்கள் தங்குமிடம் போன்ற பகுதிகள் புதர் மண்டி கிடப்பதால் அதனை சீரமைக்கும் பணியில் இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், யானை முகாம் நடைபெறும் இடத்தில் மின்சார வசதிகள், கூடாரங்கள் அமைப்பது போன்ற பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவில்களில் திருப்பணிகளை மட்டும் மேற்கொண்டு வரும் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த முகாமில், கடந்தாண்டு 30க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்ற நிலையில் இந்தாண்டும் முகாம் சிறப்புடன் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. கோவில்களில் ஆலய பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் யானைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வையும் அதன் உடல் நலத்தை பாதுகாக்கவும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தாண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமானது டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான முதற்கட்ட பணிகள் தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடைபெறும் இடத்தில் துவங்கியுள்ளது.

யானைகள் கட்டிவைக்கப்படும் இடம், பாகன்கள் தங்குமிடம் போன்ற பகுதிகள் புதர் மண்டி கிடப்பதால் அதனை சீரமைக்கும் பணியில் இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், யானை முகாம் நடைபெறும் இடத்தில் மின்சார வசதிகள், கூடாரங்கள் அமைப்பது போன்ற பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவில்களில் திருப்பணிகளை மட்டும் மேற்கொண்டு வரும் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த முகாமில், கடந்தாண்டு 30க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்ற நிலையில் இந்தாண்டும் முகாம் சிறப்புடன் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.