கோவை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற திராவிட தமிழர் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற திராவிட தமிழர் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை இந்தியா வந்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில், கோத்தாபய ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.

இந்த போராட்டத்தின் போது, உடலில் கட்டுப்போட்டு கோத்தபய இராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திராவிடர் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், அவர்களை இழுத்துச் சென்று கைது செய்தனர்.

அப்போது, இலங்கையில் தமிழர்களை கொலை செய்த ராஜபக்சே திரும்பி செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, முற்றுகையில் ஈடுபட முயன்ற 20க்கும் மேற்பட்ட திராவிட தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை இந்தியா வந்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில், கோத்தாபய ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.

இந்த போராட்டத்தின் போது, உடலில் கட்டுப்போட்டு கோத்தபய இராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திராவிடர் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், அவர்களை இழுத்துச் சென்று கைது செய்தனர்.

அப்போது, இலங்கையில் தமிழர்களை கொலை செய்த ராஜபக்சே திரும்பி செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, முற்றுகையில் ஈடுபட முயன்ற 20க்கும் மேற்பட்ட திராவிட தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.