கோவை: கோவையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
கோவை: கோவையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக சார்பில் கடந்த 13ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, 28ம் தேதியிலிருந்து விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்று வருகின்றது.

கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பாப்பநாயக்கன் புதூர் பகுதி கழகம், கணபதி பகுதி கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர் காணலை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ நடத்தி வருகிறார்.

இதேபோல், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விருப்ப மனு அளித்தவர்களிடம் புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் நடத்தினார்.

உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக சார்பில் கடந்த 13ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, 28ம் தேதியிலிருந்து விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்று வருகின்றது.

கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பாப்பநாயக்கன் புதூர் பகுதி கழகம், கணபதி பகுதி கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர் காணலை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ நடத்தி வருகிறார்.

இதேபோல், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விருப்ப மனு அளித்தவர்களிடம் புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் நடத்தினார்.