கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மாநகராட்சியில் சுகாதார பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.
கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மாநகராட்சியில் சுகாதார பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சாலைகள், வீதிகளில் தூய்மைப் பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளையும், மக்கும், மக்காத குப்பைகளை வீடுகளிலிருந்து சேகரிக்கும் பணிகளையும், மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள TATA Ac சிறுவாகனங்கள் மூலம் மக்கும் கழிவுகள் சேகரிக்கும் பணிகளையும், கொசு ஒழிப்பிற்காக மருந்து அடிக்கும் பணிகளையும், குப்பைகள் போடுவதற்கான தொட்டிகள் அனைத்து பகுதிகளிலும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் எனவும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் எனவும், பாதாள சாக்கடை மற்றும் கழிவு வாய்க்கால்களை ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகளை ஒடேமேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஐடாவத் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சாலைகள், வீதிகளில் தூய்மைப் பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளையும், மக்கும், மக்காத குப்பைகளை வீடுகளிலிருந்து சேகரிக்கும் பணிகளையும், மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள TATA Ac சிறுவாகனங்கள் மூலம் மக்கும் கழிவுகள் சேகரிக்கும் பணிகளையும், கொசு ஒழிப்பிற்காக மருந்து அடிக்கும் பணிகளையும், குப்பைகள் போடுவதற்கான தொட்டிகள் அனைத்து பகுதிகளிலும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் எனவும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் எனவும், பாதாள சாக்கடை மற்றும் கழிவு வாய்க்கால்களை ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகளை ஒடேமேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஐடாவத் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.