கோவை: கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் எல்லைக்குட்பட்ட சலீவன் வீதி பகுதியில் மூதாட்டியின் மரணத்தை அலட்சியமாக புலனாய்வு செய்த விவகாரத்தில் வெரைட்டி ஹால் ரோடு காவல் ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் எல்லைக்குட்பட்ட சலீவன் வீதி பகுதியில் மூதாட்டியின் மரணத்தை அலட்சியமாக புலனாய்வு செய்த விவகாரத்தில் வெரைட்டி ஹால் ரோடு காவல் ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.
கோவை சலீவன் வீதி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி ரங்கநாயகி (70). இவர் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த வெரைட்டி ஹால் ரோடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளார். ஆனால், தற்போது இந்த மூதாட்டியின் மரணம் கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நகைக்காகக் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மூதாட்டியின் கொலை வழக்கை முறையாக புலனாய்வு செய்யாமல் அலட்சியமாக இருந்ததற்காக, மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் காவல் ஆய்வாளரை காவல் ஆணையாளர் சுமித் சரண் இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, செந்தில்குமார் மீது வட மாநிலத்தைச் சேர்ந்த பவானி என்பவர் தங்கியிருந்த அறையில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்துள்ள சம்பவத்தை மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவில்லை என்பதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை சலீவன் வீதி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி ரங்கநாயகி (70). இவர் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த வெரைட்டி ஹால் ரோடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளார். ஆனால், தற்போது இந்த மூதாட்டியின் மரணம் கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நகைக்காகக் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மூதாட்டியின் கொலை வழக்கை முறையாக புலனாய்வு செய்யாமல் அலட்சியமாக இருந்ததற்காக, மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் காவல் ஆய்வாளரை காவல் ஆணையாளர் சுமித் சரண் இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, செந்தில்குமார் மீது வட மாநிலத்தைச் சேர்ந்த பவானி என்பவர் தங்கியிருந்த அறையில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்துள்ள சம்பவத்தை மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவில்லை என்பதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.