பிரதமர் மோடியுடன் இருப்பது போல போட்டோஷாப்; சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நபரிடம் போலீசார் விசாரணை

கோவை: கோவை அடுத்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த நபர் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடியுடன் இருப்பது போல போட்டோஷாப்பில் செய்த புகைப்படத்தை வெளியிட்டதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை அடுத்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த நபர் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடியுடன் இருப்பது போல போட்டோஷாப்பில் செய்த புகைப்படத்தை வெளியிட்டதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை பீளமேடுபுதூர் பகுதியை சேர்ந்தவர் கவி தமிழ்ச்செல்வன். இவர் தன்னை நுகர்வோர் அமைப்பு நிர்வாகி என கூறி, உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து உரையாடிய புகைப்படத்தை கிராஃபிக் மூலமாக, பிரதமர் இவருடன் கை குலுக்குவது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து எழுந்த புகாரையடுத்து, மாநகர சைபர் கிரைம் போலீசார் கவி தமிழ்ச்செல்வனிடம் இன்று விசாரணை நடத்தினர். விளம்பரத்திற்காக இந்த புகைப்படங்களை வெளியிடுகிறாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...