கோவை: பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு இத்தகைய முடிவை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் அறிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை கணபதி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலிய அலுவலகம் முன்பு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 24 மணி நேரம் நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று, மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு இத்தகைய முடிவை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் அறிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை கணபதி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலிய அலுவலகம் முன்பு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 24 மணி நேரம் நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று, மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.