திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற இளம்பெண்; குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் விட்டு தப்பி ஓட்டம்..!

கோவை: நீலகிரியை சேர்ந்த திருமணமாகாத இளம் பெண் தான் பெற்ற குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் விட்டு தப்பியோடியதையடுத்து, குழந்தையானது மருத்துவமனை நிர்வாகம் முன்னிலையில் சரணாலயம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவை: நீலகிரியை சேர்ந்த திருமணமாகாத இளம் பெண் தான் பெற்ற குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் விட்டு தப்பியோடியதையடுத்து, குழந்தையானது மருத்துவமனை நிர்வாகம் முன்னிலையில் சரணாலயம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த மாதம் 23ம் தேதி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத இளம் பெண் நிறைமாத கர்ப்பிணியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவருக்கு தாய் சேய் பிரிவில் அன்று இரவே பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் இன்குபேட்டரில் வைத்து குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், குழந்தையைப் பெற்ற தாய் திடீரென குழந்தையை விட்டு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார். இதைத் தொடர்ந்து பந்தய சாலை போலீசார், குழந்தையின் தாய் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர், குழந்தையின் நிலை குறித்து குழந்தைகள் நலக்குழுவுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 



இந்த நிலையில் இன்று சிகிச்சை முடிவடைந்ததையடுத்து குழந்தையானது கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர் வேல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் முன்னிலையில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சரணாலயம் காப்பக பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...