தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் கீழ் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்த நிலையில், 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, ஐந்தாம் வகுப்பு தேர்வு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ம் தேதி முடிவடைகிறது. எட்டாம் வகுப்பு தேர்வு, மார்ச் 30ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 17ம் தேதி முடிவடைகிறது.
ஐந்தாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களுக்கும், எட்டாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.
பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் மூன்றாண்டுகளுக்கு மாணவர்கள் தேர்வில் தோல்வியடையச் செய்யமாட்டார்கள் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.