கோவையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழ இருந்த பயணியை காப்பாற்றிய ரயில்வே காவலர் - குவியும் பாராட்டுகள்..!

கோவை: கோவை ரயில் நிலையத்தில் கோவையில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் இருந்து தவறி விழ இருந்த பெண் பயணியை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக ரயிலில் ஏற்றி அனுப்பிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் கோவையில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் இருந்து தவறி விழ இருந்த பெண் பயணியை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக ரயிலில் ஏற்றி அனுப்பிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இன்று காலை சுமார் 6:30 மணி அளவில் கோவை ரயில்நிலையத்தில் உள்ள நடைமேடை எண் மூன்றில், கோவையில் இருந்து மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல வந்தது. பயணிகள் ஏறிய பின்னர், ரயிலானது 6:40 மணி அளவில் கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்த நிலையில், ரயிலில் ஏறுவதற்காக குடும்பத்துடன் வந்த பயணிகள், ஓடும் ரயிலில் தாங்கள் கொண்டு வந்த பைகளுடன் ஏற முயன்றனர். இதில் கடைசியாக வந்த பெண் பயணி ஒருவர் ரயிலில் ஏறும் போது, படிக்கட்டில் நிலை தடுமாறிக் கீழே விழும் நிலைக்குச் சென்றார்.

அப்போது, நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் பாலகிருஷ்ணன், துரிதமாகச் செயல்பட்டு, கீழே விழும் நிலையிலிருந்த பயணியைக் காப்பாற்றி பாதுகாப்பாக ரயிலின் உள்ளே அனுப்பிவைத்தார். ரயில்வே காவலரின் துரிதமான நடவடிக்கை அங்கே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



இதை தொடர்ந்து, ரயில்வே துறையின் உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் ரயில்வே காவலரின் நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...