நீலகிரி: நீலகிரி அடுத்த மஞ்சூர் அரசு மருத்துவமனை அருகே தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டெருமை கூட்டத்தைக் கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள் இலை மூட்டைகளை வீசிவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
நீலகிரி: நீலகிரி அடுத்த மஞ்சூர் அரசு மருத்துவமனை அருகே தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டெருமை கூட்டத்தைக் கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள் இலை மூட்டைகளை வீசிவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தற்போது இந்த காட்டு மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறி தோட்டங்களில் முகாமிடுவதால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவே பயப்படுகின்றனர். தொழிலாளர்களை விரட்டும் காட்டெருமைகள் முட்டுவதால் காயம் ஏற்படுவதோடு, சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்நிலையில், மஞ்சூர் பகுதியில் அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டம் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு நாள் தோறும் காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக வருவதால் அச்சமடைந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், காட்டெருமைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.