மேட்டுப்பாளையம் - கோவை இடையிலான மெமோ ரயிலில் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்க கோரிக்கை

கோவை: மேட்டுப்பாளையம் - கோவை இடையே புதியதாக துவங்கப்பட்டுள்ள மெமோ ரயிலில் போதிய இடவசதி இல்லாததால் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்க ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையம் - கோவை இடையே புதியதாக துவங்கப்பட்டுள்ள மெமோ ரயிலில் போதிய இடவசதி இல்லாததால் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்க ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை மாநாகருக்கு தினசரி ரயில், 11 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. காலை முதல் மாலை வரை நாள் ஒன்றிக்கு எட்டு முறைக்கும் மேல் இயக்கப்படும் இந்த ரயிலை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் மற்றும் இதர தேவைகளுக்காக ஒரு நாளைக்கு 50,000க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் இந்த ரயில் சேவையை நவீனப்படுத்தும் விதமாக தெற்கு ரயில்வே, கோவை - மேட்டுப்பாளையத்திற்கு மெமோ ரயிலை அறிமுகப்படுத்தியது. அதே கட்டண முறையில், சாதாரண பயணிகள் ரயிலைவிட கண்காணிப்பு கேமரா, கழிப்பறை வசதி, இருபுறமும் இயக்கக் கூடிய எஞ்சின், கூடுதல் வேகம், என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இந்த மெமோ ரயில் உள்ளது. இருப்பினும் இதில் பயணிகளுக்கு போதிய இடவசதி இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு முன்னதாக சாதாரண பயணிகள் ரயிலில் 11 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மெமோ ரயிலில் எட்டு பெட்டிகள் மட்டுமே உள்ளது. இது முன்னர் இருந்ததை விட மூன்று பெட்டிகள் குறைவு என்பதால் நாள் ஒன்றிக்கு 1500 பயணிகள் இதில் பயணிக்கும் வாய்ப்பினை இழக்கின்றனர். மேலும், மெமோ ரயிலில் பெரும்பாலும் நின்று கொண்டே பயணிப்பதுடன் இடம் கிடைக்காமல் வயது முதிர்ந்தவர்கள் நோயாளிகள் என பலரும் ரயில் பயணத்தைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மெமோ ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்து பயணிகள் சிரமத்தைப் போக்க வேண்டும் என ரயில் பயணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...